பாடல்
ரா: தனிமையிலே....
தனிமையிலே
சு: இனிமை காண முடியுமா
ரா: தனிமையிலே இனிமை காண முடியுமா
சு: நல் இரவினிலே... சூரியனும் தெரியுமா
ரா: தனிமையிலே....
தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
சு: நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
ரா: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
சு: அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
ரா: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
சு: அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா
தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
சு: மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமையில்லை
தனிமையிலே...தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
தனிமையிலே...தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
.