Old Thamizh film songs
vaazha ninaithaal vaazhlaam
Singers: TMS, P.Susheela
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Film: Bale Pandiya (1962)
பாடல்
சு: அஹஹஹ அஹஹா ஒஹொஹோ....
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழ கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழ கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா.....
பார்க்க தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழ கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா.....
சௌ: கண்ணில் தெரியும் வண்ண பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
வாழ சொன்னால் வாழ்கிறேன்
மனமா இல்லை வாழ்வினில்
ஆழ கடலில் சோலை போலே
அழைத்து சென்றால் வாழ்கிறேன்....
சு: ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
சௌ: ஏங்கி தவிக்கும் இதயம் சாட்சி
சு: துள்ளி திரியும் மீன்கள் சாட்சி
சௌ: துடித்து நிற்கும் இளமை சாட்சி
சு: இருவர் வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்
சு, சௌ: வாழ நினைப்போம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
ஆழ கடலில் சோலை போலே
காலம் முழுதும் நீந்துவோம்
சு: ஹம்மிங்க்
சௌ: வாழ நினைப்போம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
ஆழ கடலில் சோலை போலே
காலம் முழுதும் நீந்துவோம்
|