Follow on


Old Thamizh film songs

Sirithaalum azhudhaalum nilai ondrudhaan

Singer: CS.Jayaraman
Music: R.Sudharsanam
Lyrics: Kannadasan
Film: Kalathur Kannamma (1960)
Cast: Savithri, Subbiah
(song in the background)

பாடல்

சிரித்தாலும்...
அழுதாலும்...
நிலை ஒன்றுதான்

சென்றாலும்..
 நின்றாலும்...
வழி ஒன்றுதான்
வழி ஒன்றுதான்...

சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்....

இணைவதிலே இன்பம் பிரிவினிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி...
இணைவதிலே இன்பம் பிரிவினிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி
வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
மறைவதுதான் வாழ்வில் பாதி
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்....

ஆனந்த வெறி ஏறி ஆயிரம் பொய் கூறும்
மானிட சமுதாய எல்லை...
ஆனந்த வெறி ஏறி ஆயிரம் பொய் கூறும்
மானிட சமுதாய எல்லை
இதில் தன்னலம் கருதாத
தாய்மையை மறவாத
தன்னலம் கருதாத
தாய்மையை மறவாத
பெண்மையும் இல்லாமல் இல்லை

சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்.....

.