Follow on


Old Thamizh film songs

Arupadai Veedu Konda 

Singer: Seerkazhi Govindarajan
Music: KV.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kandhan Karunai (1967)


பாடல்

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுபடை தனிலே வரு முருகா
முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுபடை தனிலே வரு முருகா
முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா

பாட்டுடை தலைவன் என்று உன்னை வைத்தேன்
பாட்டுடை தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னை பாடி தொழுவதர்க்கே என்னை வைத்தேன்
உன்னை பாடி தொழுவதர்க்கே என்னை வைத்தேன்
முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா

வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு
அந்த வெள்ளி பனிதலையர் கொடுத்ததற்கு
....ஆஅஆஅ
வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு
அந்த வெள்ளி பனிதலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு
நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு
அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஒரு பெரும் தத்துவத்தின் சாரெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருளுரைத்து
ஒரு பெரும் தத்துவத்தின் சாரெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
எங்கள் தமிழ் திருநாடு கண்ட ஸ்வாமிமலை
எங்கள் தமிழ் திருநாடு கண்ட ஸ்வாமிமலை
அறுபடை வீடு கொண்ட திருமுருகா

தேவர் படை தலைமை பொருப்பெடுத்து...
தேவர் படை தலைமை பொருப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
தேவர் படை தலைமை பொருப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
அறுபடை வீடு கொண்ட திருமுருகா

குரு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குலமகளாக வரும் நினைவோடு
குரு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குலமகளாக வரும் நினைவோடு
திருமண கோலம் கொண்ட ஒரு வீடு
திருமண கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ண திருபரங்குன்றம் என்னும் படை வீடு
வண்ண திருபரங்குன்றம் என்னும் படை வீடு
முருகா...அறுபடை வீடு கொண்ட திருமுருகா

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளு தமிழ் குறத்தி தன்னை மணந்து
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளு தமிழ் குறத்தி தன்னை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை
காவல் புரியவென்று அமர்ந்த மலை
எங்கள் கன்னி தமிழர் திரு தணிகை மலை
தணிகை மலை திரு தணிகை மலை
அறுபடை வீடு கொண்ட திருமுருகா

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
அடியவர்க்கு...
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை
மயில் விளையாடும் பழமுதிர்சோலை....

முருகா...அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுபடை தனிலே வரு முருகா... முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
முருகா....முருகா......

.