Follow on


Old Thamizh film songs

aadhavan udhithaan malaimele

Singers: TMS, P.Susheela
Music: R.Sudarsanam
Lyrics: Kannadasan
Film: Mani magudam (1966)


பாடல்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
அதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே

சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன
சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்
சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....

டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
புதிய பாதை தெரிகின்றது
சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே


.