Follow on


Old Thamizh film songs

Yesunathar pesinaal avar enna pesuvaar

Singer: B.Vasantha
Music: KV.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Thaaye Unakkaaga (1966)

பாடல்

ஏசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்
ஏசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்....

பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள்
பார்வையிலே பழுது வந்தால் தேவனை கேளுங்கள்
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள்
பார்வையிலே பழுது வந்தால் தேவனை கேளுங்கள்
திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்

ஏசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும்
அதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும்
அதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்

ஏசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

.