Follow on


Old Thamizh film songs

nilavai paarthu
Singer: T.M.Soundararajan
Music: MSV
Lyrics: Kannadasan
Film: Savaale Samali (1971)

பாடல்

நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே....
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே....
நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே....
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே...

நதியை பார்த்து நாணல் சொன்னது
என்னை தொடாதே...
நாளை பார்த்து இரவு சொன்னது
என்னை தொடாதே...

நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே....
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே........

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது.....
சொன்ன வார்த்தையும் இரவல்தானது.....
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது.

நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே....
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே........

தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தை தன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே
நானும் இல்லையே நீயும் இல்லையே

நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே....
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே............

தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா
தர்மம் காத்த கை சம தர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதி இல்லை
நீ அந்த கூட்டமே இதில் அதிசயம் இல்லை
நீ அந்த கூட்டமே இதில் அதிசயம் இல்லை

நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே....
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே............