Follow on

Old Thamizh film songs
 
Marudhamalai meedhile kudi kondiruppavane...
Marudha malaiyaane...
Singers:  TMS, P.Susheela
Music: K.V.Mahadevan
Lyrics: A.Maruthakasi
Film: Thunaivan (1969)

பாடல்
சௌ: மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே..
மனதார நினைப்பவர்கள்
எண்ணியதை முடிப்பவனே..
வாயார துதிப்பவர்கள்
கேட்டதை கொடுப்பவனே
வந்தவர்க்கு அருள் புரியும்
மருத மலை ஆண்டவனே

சௌ, சு: மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
பிள்ளை முகம் பாரு முருகா பிறவி பிணி தீரு
பிள்ளை முகம் பாரு முருகா பிறவி பிணி தீரு
மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானே....

சு: உன்னை ஒரு போதும் எண்ண மறவேனே
சென்னி மலை வாழும் பெருமானே..
சௌ: அன்னை தந்தையுடன் உன்னை சிவன் மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே...
சு: வள்ளல் உனை நாடி வள்ளி மலை தேடி
வருவோர்க்கு இன்பம் தருவோனே...
சௌ, சு: கள்ளம் அறியாத பிள்ளை பெருமானே
காங்கேய நல்லுர் வளர்வோனே
சு: திருமுருகன் பூண்டியில் பரமன் அருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்து பூஜித்த குமரா..
சௌ: தென் சேரி மலை கண்டு நெஞ்சார துதிப்போர்க்கு
அஞ்சாதே என அபயம் தருகின்ற அமரா...
சு: வருந்தி வரும் அடியவர்கள் கடும் துயரம் தீர்த்தானே
குருந்த மலை மீதிலே கொஞ்சும் வேளே...
சௌ: வற்றாத கருணை மழை நற்றா என பொழியும்
வட்டமலை தெய்வமே  வெற்றி வேளே...
அமரர் கூட்டம் ஆடவும் அசுரர் தோற்று ஓடவும்
சமர் புரிந்த குமரகோட்ட தவமணியே
சு: அன்பன் ராமலிங்க வள்ளல் நெஞ்சில்
அருட்பாவின் வெள்ளம் பொங்க செய்த
கந்த கோட்ட தமிழ் கனியே...
சௌ, சு:  தஞ்சம் என்று வந்து உன்னை கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டும் அய்யா சுடரொளியே...

சௌ: வீரிட்டெழுந்த சூரன் போரிட்டழிய
திருப்போரூரில் வேல் விடுத்து நின்றவா
சு: ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
ஒரு ஊரை மயிலம் என கொண்டவா....

சௌ, சு: பக்தர்கள்  சேரூர் பழ வினை தீருர்
உத்தரமேரூர் உறைபவனே
சௌ: எங்கும் இல்லாத விதத்தினிலே
பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே
மயிலை ஆட செய்தவனே...

சௌ, சு:  வருபவர் பிணி தீர்க்கும் வைதீஸ்வரன் பெற்ற முருகனே ஷண்முகா முத்துகுமாரா
சரவணா எங்களின் சிறுவனை காப்பாற்று சக்தி வேலாயுதா சூர சம்ஹாரா....
சௌ: தின்புய சூரனை வென்றதை முனிவர்க்கு எண் கண்ணிலே சொன்ன சுப்ரமண்யா..
சு: கந்தன் குடி வாழ்ந்திடும் கந்தனே அன்பரின் கண்ணுக்கு விருந்தாக அமர்ந்த புண்யா..

சௌ: தக்க தருணத்திலே பக்தரின் பக்கம் துணை இருப்பாய்
சிக்கலை தீர்த்து வைப்பாய் ஜெகம் புகழ் சிக்கல் சிங்கார வேலா...
சு: செட்டி மகன் என்னும் இறைவா செந்தமிழின் தலைவா
எட்டிகுடி தனிலே அகத்தியன் ஏற்ற குருவானவா....

சௌ: பழகு தமிழ் கொண்டு அருணகிரி அன்று திருப்புகழ் பாடிய வயலூரா...
சு: புலவன் நக்கீரன் புனைந்த முருகாற்றுபடை போற்றும் விராலிமலை வீரா...

சௌ, சு: கொன்றதொரு சூரனை கோல மயிலாகவே குன்றகுடியில் கொண்ட குமரய்யா..
கந்தய்யா எங்களின் கவலையை தீரய்யா.....
கழுகு மலையில் வாழும் வேலைய்யா...

சு: பர்வதராஜ குமாரியின் மகனே
பாசத்தை உணர்ந்த பாலகனே
சௌ: திருமலை முருகா மழலையின் நாவில் ஒரு மொழி தருவாய் காவலனே

சௌ, சு: தக்கலை குமாரவேலா
ஒரு தாய் நிலை அறிந்த பாலா
மக்களை காத்திடும் சீலா
என் மகனை காத்திட வா வா வா
சௌ: வள்ளியூரிலே குடி கொண்ட
வள்ளி மணாளா வழி காட்டு
பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
பிணிகள் விலகிட தாலாட்டு....

சௌ, சு: அலைந்து தவித்தோம் குமரய்யா
சௌ: வடபழனிக்கு வந்தோம் முருகய்யா
சு: நலம் பெற வேண்டும் மகனய்யா
சௌ, சு:  நம்பிக்கை தருவாய் கந்தய்யா

சௌ: தணியாத கோவம் தணிந்த இடம் வந்தும் தனி தனியாக இருப்பவனே
சு: கனிந்த முகம் காட்டு கலங்கும் எமை தேற்று
தணிகை மலை மீது வசிப்பவனே...
சௌ: தந்தைக்கு ஓம் எனும் மந்திர பொருள் சொன்ன ஸ்வாமிமலை வாழும் குரு நாதா...
சு: மைந்தன் துயர் தீர வந்த பிணி மாற
கந்தா கடம்பா வரமே தா...

சௌ: பூ உதிர் சோலையில் வள்ளியை மணந்து பழமுதிர் சோலைக்கு வந்தவனே
சு: காவல் தெய்வம் நீயென வந்தோம்
கை கொடுப்பாய் எங்கள் மன்னவனே...
சௌ: திருப்புகழ் பாடி திருவடி தேடி
தண்டனிட்டோம் எங்கள் தென்னவனே
சு: திருப்பரங்குன்றத்து நாயகனே
குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே
சௌ, சு: வேலவனே வேலவனே