Follow on


Old Thamizh film songs

karunai mazhaiye

Music: G.Devarajan
Singers: P.Susheela
Lyrics (for the movie): Kannadasan, Vaali, Ayyasami
Film: Annai Velankanni (1971)


பாடல்

கருணை மழையே மேரி மாதா
கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின்
கால்கள் தருவாயோ

கருணை மழையே மேரி மாதா
கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின்
கால்கள் தருவாயோ

கருணை மழையே மேரி மாதா
கண்கள் திறவாயோ

கன்னி மாதா தேவ சபையின்
கதவு திறவாதோ
கன்னி மாதா தேவ சபையின்
கதவு திறவாதோ
கனிந்து உருகும் மெழுகு விளக்கின்
ஒளியும் வளராதோ
ஒளியும் வளராதோ

கருணை மழையே மேரி மாதா
கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின்
கால்கள் தருவாயோ

கருணை மழையே மேரி மாதா
கண்கள் திறவாயோ

தொட்ட இடங்கள் கோடி காலம்
வாழும் உன்னாலே
தொட்ட இடங்கள் கோடி காலம்
வாழும் உன்னாலே
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன்
உந்தன் முன்னாலே

ஆடும் அலைகள் உன்னாலே
அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே
உதவி புரிவாய் கண்ணாலே
கண்ணாலே

கருணை மழையே மேரி மாதா
கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின்
கால்கள் தருவாயோ

கருணை மழையே மேரி மாதா
கண்கள் திறவாயோ

.