Follow on


Old Thamizh film songs

pattanamthaan pogalaamadi

Singers: Seerkazhi Govindarajan,....
Music: Master Venu
Lyrics: Udumalai Narayana Kavi
Film: Engal Veettu Mahaalakshmi (1957)
Cast: Nageswara Rao, Savithri

பாடல்

ஆண்: அஹம் மூட்டைய கட்டிக்க

பெண்: எதுக்கு

கோ: பட்டணம்தான் போகலாமடி பொம்பளை
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

பெண்: டவுனு பக்கம் போவாதீங்க மாப்பிளே
டவுனாயி போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது
பயணம் வேண்டான்னா கேளு மாமா

கோ: கெட்டவுங்க பட்டணத்தை ஒட்டிகோணும் என்பதாலே...
கெட்டவுங்க பட்டணத்தை ஒட்டிகோணும் என்பதாலே
பட்டிக்காட்டை விட்டு போட்டு பல பேரும் போவதாலே...
கட்டு சோத்தை கட்டி கொள்ளடி பொம்பளே
தட்டி சொன்னா கேட்க மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே...

பெண்: வேலை ஏதுங்க கூலி ஏதுங்க
வெட்க கேட்டை சொல்றேன் கேளுங்க...
அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க
வெட்க கேட்டை சொல்றேன் கேளுங்க
காலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்
பிஏ படிப்பு பெஞ்சு துடைக்குதாம்..
ஆளை ஏச்சி அளும் பொழைக்குதாம்
அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்..
மேலே போனது நூத்தில ஒண்ணாம்
மிச்சம் உள்ளது லாட்ரி அடிக்குதாம்

கோ: எப்டீ...

பெண்: ஒண்ணான சாமியெல்லாம்
ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே..மாப்பிளே
ஒண்ணான சாமியெல்லாம்
ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
உன்னாலே என்னாகும்
எண்ணாம போனா
பின்னாலே கேடு மாமா...

கோ: ராத்திரி பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு
ராத்திரி பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
ட்ராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன்
ராசா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேர்த்து புழுங்கினா பீச்சுக்கு போவேன்
மீந்த பணத்திலே மீனும் வாங்குவேன்...
ஆத்தாடி ஒன் கையிலே கொடுப்பேன்
ஆக்க சொல்லியே சாப்பிட்டு படுப்பேன்

பெண்: மேலே

கோ: இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும்
உங்கப்பாவ கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி....

கோ: பட்டணம்தான் போகலாமடி பொம்பளை
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

பெண்: டவுனு பக்கம் போவாதீங்க மாப்பிளே
டவுனாகி போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது
பயணம் வேண்டான்னா கேளு மாமா

பெண்: மனுஷன மனுஷன் இழுக்குற வேலை
வயிரு காஞ்சவன் செய்யற வேல
மனுஷன மனுஷன் இழுக்குற வேலை
வயிரு காஞ்சவன் செய்யற வேல
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது
மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து
எல்லா வேலயும் செய்வே துணிஞ்சு...
இரவு ராணிகள் வலையிலே விழுந்து
ஏமாந்து போவே...இன்னும் கேளு

கோ: அப்புறம்

பெண்: போலிசு புலி புடிக்கும் மாப்பிளே
புர்ராவே பேத்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா
பொண்டாட்டி பேச்ச கேளு

கோ: அப்படியா.. ஆஹா...
நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டு போகுமுன்னு...
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டு போகுமுன்னு
உண்மையோடு சொன்ன சொல்லு
நன்மையாக தோணுது
பட்டணம்தான் போகமாட்டேண்டி
உன்னையும் பயணமாக சொல்லமாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணெ தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே

பெண்: மாமா...

கோ:  ஏம்மா...

பெண்: என்னை தனியா உடவே மாட்டேன்னு
என் தலை மேல் அடிச்சு சத்யம் பண்ணு

கோ: எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்

இருவரும்: ஏரோட்டி பாத்தி புடிச்சு
அதிலே நீர் பாய்ச்சி நெல்ல வெதச்சு
நம்ம ஊரோடு ஒண்ணாக
உள்ளதை கொண்டு நாம்
உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு
அதிலே நீர் பாய்ச்சி நெல்ல வெதச்சு
நம்ம ஊரோடு ஒண்ணாக
உள்ளதை கொண்டு நாம்
உல்லாசமாக வாழ்வோம்





.