Follow on

Paalum Pazhamum song
Old Thamizh film songs

Aalaya maniyin osaiyai naan ketten

Singer: P.Susheela
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Film: Paalum Pazhamum (1961)
Cast: Sivaji Ganesan, Saroja Devi, Sowcar Janaki


பாடல்

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்...
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்...

உன் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி   கேட்டேன்

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்...

இளகும் மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே
இளகும் மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இது என்றான்
இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்

இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி   கேட்டேன்
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்...

காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி   கேட்டேன்
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்...

ம்ஹுஹு ம்ஹுஹு ம்ஹுஹு
ம்ஹுஹு ம்ஹுஹு ம்ஹுஹு